கண்ணகிபுரம் பகுதியில்கடைக்கு தீவைப்பு 2 வயதுக் குழந்தை பலி

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கிளிநொச்சி- புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிபத்தில் 2 வயது சிறுவன்
 உயிரிழந்தான்.  குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில்ல் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  மூவர் கொண்ட குழு வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோல் விசி தீவைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பொலிஸாரிடம்
 முறையிட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி கடை உரிமையாளர் ரமேஸ்குமார் தெரிவிக்கையில், வர்த்தக நடவடிக்கைகள் முடிவடைந்து கடையை பூட்டிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சில இளைஞர்கள் பெற்றோல் கேட்டனர். உருட்டிச் செல்ல வேண்டுமே என எண்ணி மீண்டும்
 கடையை திறந்து அவர்களுக்கு உதவும் வகையில் பெற்றோலைக் கொடுப்பதற்கு முயன்றேன். கடையின் பின் பகுதியில் இவர்கள் நின்றனர். அப்பகுதியிலேயேதான் முதலில் தீ பிடித்தது. 
அவர்கள் ஏற்கனவே போத்தலில் மறைத்து வைத்திருந்த பெற்றோலை ஊற்றி வேண்டுமென்றே தீ வைத்திருக்க வேண்டும் என தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக