கட்டுநாயக்க வந்த விமானம் 202 பயணிகளுடன் அவசர தரையிறக்கம!

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017


இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை
 உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக