அரச பேருந்து வவுனியாவில் ரயிலுடன் மோதியது உயிர் தப்பிய பயணிகள்.!

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (04.08) மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று  புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
மேலும் இவ்விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அறியப்படுகிறது. இப் புகையிரதகடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது.
 சாரதி கவலைக்கிடமான நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப் புகையிரதகடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக