.அதிகாலை பூஜைக்கு கதிர்காம முருகன் ஆலயத்தில் தடை

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வரலாற்று சிரப்புமிக்க கதிர்காமம் தேவாலயத்தில்.21.08.2017. இன்று அதிகாலை குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வரலாற்று சம்பிரதாயமாக இடம்பெறும் அதிகாலை பூஜைக்கு இன்றைய தினம் தடை ஏற்பட்டுள்ளது
தேவாலயத்தின் பிரதான பூஜகர் தேவாலயத்தை திறக்க செல்லும் சந்தர்ப்பத்தில் பஸ்நாயக்க நிலமேயினால் தேவாலயத்தின் சாவி பறிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வரையிலும் தேவாலயம் மூடி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக