பண்ணை படகு விபத்தில் மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்!

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

யாழ் பண்ணை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 பேர் மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கவிழ்ந்த படகிலிருந்து தப்பி வந்த ஒரு மாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு 
வருகிறது.
சற்று முன்னர் வரை 5 உயிரிழந்த சடலங்களை கடற்படையினர் மற்றும் குருநகரை சேர்ந்த மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்களென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 பேரையும் தேடும் பணி தீவிரமாக 
இடம்பெற்று வருகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக