நாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில் வெளியாகும்

சனி, 1 ஜூன், 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  
387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 452,979 பரீட்சார்த்திகள் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர் கூறினார்.
 க.பொ.த (சா/த) பரீட்சைகள் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றமை
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில் வெளியாகும்

யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் க.பொ.த.(உ.த.) - 2023 (2024) பரீட்சைக்குத் தோற்றிய வாழ்வக மாணவர்கள் மூவருமே சித்தி பெற்றுள்ளனர்.
செல்வி சிவசக்தி லக்சிகா தமிழ், இந்து நாகரிகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலுமே A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 97 வது இடத்தினையும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
செல்வி வெற்றிவேல் ஜனுபா கர்நாடக சங்கீதத்தில் A சித்தியும் தமிழ் C, அரசியல் விஞ்ஞானம் S பெற்றுள்ளார்.
 இப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றுமொரு மாணவனான செல்வன் நவனீதன் கௌதமன் இந்து நாகரிகம், தமிழ் ஆகிய பாடங்களில் C சித்தியும் அரசியல் விஞ்ஞான பாடத்தில் S சித்தியும் பெற்றுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

திடீரென இலங்கையில் அதிகரித்த மீன்களின் விலைகள்

வியாழன், 30 மே, 2024

நாட்டில்  ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. அம்பாறை 
மாவட்டத்தின் பெரிய நீலாவணை, கல்முனை , மருதமுனை, பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், பகுதிகளில் உள்ள 
மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் புயல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
 விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் சந்தைகளும் மீன்கள் இன்மையால் மூடி காணப்படுகின்றன.
குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது. இதற்கு 
காரணம் சடுதியாக
 ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் நிலவு வெளிச்சம் போன்ற காரணத்தினால் மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 கடும் காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 1600 ரூபாவாகவும் 
பாரை மீன் ஒரு கிலோ 2400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1700 ஆகவும் சூடை மீன் 
ஒரு கிலோ 1000 ரூபாவாகவும்
 சுறா மீன் ஒரு கிலோ 2500 ரூபாயாகவும் வளையா மீன் 1500 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 1600 ரூபா ஆகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
 கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இப்பகுதியில் கடற் கருவாடுகள் ஆற்றுக்கருவாடுகளுக்கு கிராக்கி நிலவி வருகின்றமையும்
என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - திடீரென இலங்கையில் அதிகரித்த மீன்களின் விலைகள்

நாட்டில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதன், 29 மே, 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
தெரிவித்துள்ளார்.  
கல்விப் பொதுச் சான்றிதழ் ஏ லெவல் தேர்வு கடந்த ஜனவரி 4-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை நடைபெற்றது.  
அதன்படி, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான பணிகளை பரீட்சை திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
346,976 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கான ICTபுலமைப்பரிசில் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

செவ்வாய், 28 மே, 2024

நாட்டில் க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து 
வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த 
திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் செயலாளரின் பரிந்துரையுடன், வகுப்பாசிரியர்,
 பாடசாலை அதிபர்
, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் செயலாளர், ஜனாதிபதி நிதியம், இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டீ. ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பிவைக்கவும்.
 கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் பெயர் மற்றும் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ள கல்வி வலயத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.
 இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் மே மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் நிலவிய பல்வேறு 
நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மோசமான 
காலநிலை காரணமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியாத மாணவர்கள் அதிகமானோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கான ICTபுலமைப்பரிசில் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

நாட்டில் மேல் மாகாணத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

திங்கள், 27 மே, 2024

நாட்டில் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.  
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றுவதற்காக இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  
கொழும்பு மாநகர சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அகற்றப்பட்ட மரங்களுக்கு புதிய மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் 
மேலும் தெரிவித்தார்.  
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார். 
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி 20 மாவட்டங்களின் 212 பிரதேச செயலகப் பிரிவுகளில் 14,754 குடும்பங்களில் 55,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 



 

READ MORE - நாட்டில் மேல் மாகாணத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

ஞாயிறு, 26 மே, 2024

நாடு முழுவதும் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை ஓட்டும் போது குறைந்தது 50 மீற்றர் தூரத்தை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அறிவித்துள்ளது. 
இந்த எச்சரிக்கைகளை இலத்திரனியல் காட்சிப் பலகைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வாகன சாரதிகள் அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 இதற்கிடையில், ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் உள்ள மின்னணு காட்சி பலகைகளில் காட்டப்படும் வேக வரம்பை
 மீற வேண்டாம் என்றும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு 
அறிவிக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

பல பகுதிகளில் மலையகத்தில் மின் துண்டிப்பு : ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

சனி, 25 மே, 2024

மோசமான காலநிலை காரணமாக மலையக புகையிரதத்தில் இரவு நேர அஞ்சல் புகையிரதம்.25-05-2024. இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே இந்த தகவலை
 வெளியிட்டுள்ளார். 
இதன் காரணமாக  கொழும்பில் இருந்து பதுளைக்கும் பதுளையில் இருந்து கொழும்புக்கும் இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல் இரவில் புறப்பட வேண்டிய சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 20 இடங்களில் ரயில் தண்டவாளத்தில் 
மரங்கள் விழுந்து கிடப்பதாகவும், ரயில்வே சிக்னல் அமைப்பை செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்
 அவர் கூறுகிறார். 
மலையகத்தின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால், சிக்னல்கள் இயங்கவில்லை என்றும்,புகையிரத கடவையில் பயணிக்கும் போக்குவரத்து சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.  
புகையிரத கடவைகளை கடக்கும்போது சிக்னல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ அல்லது சிகப்பு சிக்னல் மட்டும் தொடர்ந்து மின் மணிகள் ஒலித்துக்கொண்டாலோ சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பல பகுதிகளில் மலையகத்தில் மின் துண்டிப்பு : ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறவுள்ள்ளது

வெள்ளி, 24 மே, 2024

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை.24-05-2024. இன்று திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறவுள்ள்ளது

நாட்டில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

வியாழன், 23 மே, 2024

நாட்டில்  கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இன்று (23.05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத்
 தெரிவித்தார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், தற்போது இலங்கையில் அபிவிருத்தியடைந்த தேசிய வைத்தியசாலைகளாக கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள்
 மட்டுமே உள்ளன.  
இதன்படி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  
சுகாதார நிலையத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கராப்பிட்டிய வைத்தியசாலை அதிகளவு பங்களிப்புச் செய்வதாகவும் தெரிவித்த அமைச்சர், ருஹுனு 
பல்கலைக்கழகத்தின் மருத்துவ பயிற்சி வைத்தியசாலையாக வருடாந்தம் 1000 இற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும்
 குறிப்பிட்டார்.  
இதேவேளை, பொத்துவில் ஆரம்ப வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

புதன், 22 மே, 2024

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை 
பிரசவித்துள்ளார்.
மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் 
கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே 
அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில், 
இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த 
தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் 
அரிதான விடயமாக பார்க்கப்படுவதாகவும், 
அத்துடன் பிறந்த நான்கு 
குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் 
உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 
மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

செவ்வாய், 21 மே, 2024

நாட்டில்கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (21) கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் சேவையில் ஒரு நாளைக்கு நான்கு ரயில்கள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

திங்கள், 20 மே, 2024

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உள்கட்டமைப்பை
 நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
 குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

சுவிஸ் குடிமக்களைவிட அதிக சுவிட்சர்லாந்தில் ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்

ஞாயிறு, 19 மே, 2024

எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குப் பணி செய்யவருவோர் உட்பட, வெளிநாட்டவர்கள், சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுவதாக  தெரிவிக்கப்படுகிறது. 
நேற்று முன் தினம் வெளியான பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளன. 
. சில துறைகளில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் மட்டும் சுவிஸ் குடிமக்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சுவிஸ் குடிமக்களைவிட அதிக சுவிட்சர்லாந்தில் ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

சனி, 18 மே, 2024

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு 
ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.
வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்துகொள்ள பயணிப்பதாகவும் சக பயணிகளுக்கு கூறியுள்ளார்.
தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என புலம்பி உள்ளார். அப்போது அதனை கேட்ட விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை அந்த வாலிபருக்காக 
ஏற்பாடு செய்தனர்.
விமான பணிப்பெண் ஒருவர் புதுபெண்போல அலங்கரிக்கப்பட்டு அந்த வாலிபருடன் திருமண சடங்கில் ஈடுபட்டதுடன் , இருவரும் முத்தங்களை பரிமாறி திருமண சடங்கை நிறைவு செய்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

நாட்டில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

வெள்ளி, 17 மே, 2024

நாட்டில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 அறிவித்துள்ளது.
இந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மீனவ மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

வியாழன், 16 மே, 2024

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக 
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் 15-05-2024.அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க
 பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.  
அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது.    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் முதல்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

புதன், 15 மே, 2024

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
 தெரிவித்துள்ளார்.  
இது குறித்து கல்வி அமைச்சும்  சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய கூட்டணியின் களுத்துறை   மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
 மேலும் இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேரே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் முதல்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டம்

செவ்வாய், 14 மே, 2024

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் 
வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை 
செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சேவையானது சாதாரண பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு 
மணித்தியாலம் எடுக்கும் தூரத்தை 10 நிமிடங்களில் பூர்த்தி
 செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த டாக்ஸி சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டம்

நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் பாரிய மோசடி அம்பலம்

திங்கள், 13 மே, 2024

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும்
 பாரியளவிலான காலணி கடத்தல் தொடர்பில் தகவல்
 வெளியாகியுள்ளது.  
உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இவர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக
 குறிப்பிடப்படுகின்றது. 
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு ஜோடி காலணிக்கு குறைந்தது 2000 ரூபா வரி
 அறவிடப்படுகிறது.
 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணிகளை விட, இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு காலணிகளே சந்தையில் மிகவும் குறைந்த விலையில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

ஞாயிறு, 12 மே, 2024

நாட்டில் வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா.12-05-2024. இன்று 
இடம் பெற்றிருந்தது.  
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாகவ விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  
மேலும் கலை நிலா கலையகத்தினால் குளக்கரையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுககையும்
 இடம் பெற்றிருந்தது.  
சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற குறித்த நிகழ்வில் பெருமளான இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

சனி, 11 மே, 2024

 

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு
 தப்பிச் சென்றுள்ளார்.
வடமராட்சி- துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது
 சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த
 நிலையில் தனது
 தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக  10-05-2024.அன்று  மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், 
குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு.11-05-2024. இன்று காலை முதல் தாயும், சிறுமியும் தலைமறைவாகியுள்ளனர் என
 தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் காவல் 
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

வெள்ளி, 10 மே, 2024


மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை 
பதிவு செய்துள்ளது.
 அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.88 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

வியாழன், 9 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து 
காணப்படுகின்றது.  
அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற இயல்பு நிலையுடன் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர
 வியாபாரங்கள் 
போன்றவைகள் வழமை போன்று இயங்கிய போதிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.  
மேலும் அரச தனியார் போக்குவரத்து குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் மட்டுப்படுத்த மட்டில் இடம்பெற்றது. அதில் பயணம் செய்கின்ற பொதுமக்களின் எண்ணிக்கை 
குறைவாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது.இது தவிர அரச தனியார் வங்கிகள் திறந்துள்ளதுடன் மக்கள் வருகை 
குறைந்தளவில் காணப்படுவதடன் சில இடங்களில் ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர். கடந்த
 தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் மழை
 திடிரென பெய்ததுடன் அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை
 அவதானிக்க முடிந்தது.  
சவளக்கடை மத்தியமுகாம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் வான்கதவுகள் தற்போது திறக்கப் பட்டுள்ளதால் அதிகளவான நீர் வாய்க்கால் ஊடாக வெளியேறுகின்றது.
இவ்வாறு வெளியேறும் நீரில் அதிகளவான மக்கள் வெப்பத்தை தணிப்பதற்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா சென்று நீராடுகின்றனர். மேலும் பிரதேச செயலகங்கள் நீதிமன்றங்கள் வங்கிகள் பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்குகிறது. 
எனினும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன் இரவு வேளையில் அதிகளவில் நடமாடி வருகின்றனர்.அத்துடன் பெரிய நீலாவணை, 
ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது,
 மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம்,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.  
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் சில இடங்களில் முப்படையினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு 
வருகின்றனர்.
எனினும் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டி 
காணப்பட்டது. மேலும் வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள் பாமசிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று
 திறக்கப்பட்டாலும் மக்கள் ஆர்வத்தடன் பொருட் கொள்வனவில் ஈடுபடவில்லை .  
 எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் 
தெரிவித்தமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்