இலங்கையில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

திங்கள், 11 ஜூலை, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியிலும் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம்
 தீர்மானித்துள்ளது.
இதன்படி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவினால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ்
 தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 40,000 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக