பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

சனி, 31 அக்டோபர், 2020

 மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டத்தையடுத்து கடந்த ஏழு தினங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத்தரப்பினர், அரச அலுவலர்கள் அடங்கிய கொரோனா தடுப்புச் செயலணி தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் இரவு, பகல் பாராது 
மேற்கொண்டு வருகிறது.
அதே நேரம், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் கையிலிருப்பில் உள்ளதாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது வர்த்தக சங்கத்தினர் 
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில வியாபாரிகள் கோழி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட சிறுதூர இடைவெளியில் இரு
 பிரதேசங்களுக்கிடையில் பொருட்களின் விலையில் பாரிய வித்தியாசம் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரும் பொது மக்களும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் 
தவித்துக் கொண்டிருக்கும்
 நிலையில், நாளாந்தம் கூலித் தொழிலில் ஈடுபடுவோர், அன்றாடம் வியாபாரம் செய்வோரும் தமது வருமானத்தை இழந்துள்ள
 இந்த இக்கட்டான நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்புக்கள் மென்மேலும் சுமையை 
அதிகரிக்கச் செய்துள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக