யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

வெள்ளி, 8 மே, 2020

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக நாளை (9) சனிக்கிழமையும் யாழின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமையும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் பராமரிப்புப் பணியென கூறப்பட்டது.
கடந்த சனிக்கிழமையும், நாளைய சனிக்கிழமையும் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதி.
 கொரொனாவை கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிற்குள் தங்கியிருக்க வேண்டும் என அரசு அறிவித்து வரும் நிலையில், மின் துண்டிப்பு நடைபெறுகிறது.வீடுகளிற்குள் முடங்கியிருக்கும் மக்களிற்கு மின்சாரம் மிக அவசியமான தேவைகளில் ஒன்று
. மக்களை வீடுகளிற்குள் முடக்கி வைத்திருக்க, அரசுக்கும் மின்சாரம் தேவை. ஆனால், இரண்டு தரப்பு பார்வையிலும் இந்த
 விவகாரத்தை நோக்காமல், யாழில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுகிறது.இது மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் முடுக்கி 
விடப்படுகிறது. அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டியது அவசியம். மக்களை வீடுகளிற்குள் தங்க வைப்பதற்கு எதை செய்ய முடியுமோ, அதை அரச 
நிறுவனங்கள் செய்ய வேண்டியது அவசியம்.ஆனால், யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு அந்த வகையானது அல்ல. அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், இரண்டு நாட்கள் பகல் பொழுது முழுவதும் மின் துண்டிப்பை
 மேற்கொண்டு, சாதாரண காலத்தில்
 மின்சாரசபை மேற்கொள்ளும் பராமரிப்பு பணிக்கு இது உகந்த தருமணமல்ல.யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து தொடர்புடைய அதிகாரிகள், அரச அதிபர், வடக்கு ஆளுனர் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.நாளை காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு 
அமுல்ப்படுத்தப்படும் இடங்கள்-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக