மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வெள்ளி, 22 மே, 2020

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது
 என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற 
நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில்
 எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாட்டில் கொரோனா
 அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக