நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

வியாழன், 7 மே, 2020

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
 சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய
 நோயாளிகள் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய நால்வர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி பழகியவர்கள் என 
தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நால்வருக்குள் 7 வயது சிறுவனும் உள்ளடங்குவதாக சுகாதார பணிப்பாளர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக