கொக்கட்டிச்சோலை இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கைது

புதன், 30 ஜனவரி, 2019

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சட்டில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்சல் ஊழல் மோசடிப் பிரிவினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பிரதேசத்தில் நேற்று 28,01,2018, திங்கட்கிழமை சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்த போது பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது லொறியை கைவிட்டுவிட்டு லொறி உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடியுள்ளதையடுத்து பொலிசார் லொறியை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு 
எடுத்துச் சென்றனர்
இந்த நிலையில் லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு கோரியுள்ள நிலையில் லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு 
தெரிவித்துள்ளார்.
அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


0 கருத்துகள்:

கருத்துரையிடுக