நாட்டில் பெற்றோல் டீசலின் விலை நள்ளிரவு 11.02.19 -முதல் அதிகரிப்பு .

திங்கள், 11 பிப்ரவரி, 2019

 நள்ளிரவு முதல் (11.02.2019)அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன . இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும் , ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் 
அதிகரிக்கப்பட்டுள்ளன .
 சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன 
. இதற்கமைய இதுவரை 147 ரூபாவிற்கு
 விற்பனை செய்யப்பட்ட 
ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய 152 ரூபாவாகும் . இதுவரை 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை
 செய்யப்படவுள்ளது .
இதுவரை 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாகும் . இதுவரை 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக