மீண்டும் இலங்கையில் கடும் சிவப்பு மழை எச்சரிக்கை

புதன், 16 ஜனவரி, 2019

இலங்கையின் சில பகுதிகளுக்கு அடுத்துவரும் சில மணித்தியாலங்கள்வரை பாரிய மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பினை இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.மத்திய மாகாணம், ஊவா மாகாணம்,
 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் மற்றும் வட மத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டம் ஆகியனவற்றுக்கே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்டுள்ள
 பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
அத்துடன் கிழக்கின் கடற்பிராந்தியத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மழை பொழியும் நேரத்தில்,
 கடுமையான இடி மின்னல் தோன்றக்கூடும் என்பதனால், மக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் 
கேட்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக