பொருட்களை அதிக விலைக்கு மன்னாரில் விற்ற மூவருக்கு கடுமையான அபராதம்

சனி, 17 ஜூன், 2023

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு 
இலட்சம் ரூபா அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்க பெற்ற முறைப்பாடு தொடர்பில் 
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு 
செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வர்த்தகர்கள் மூவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையை தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் 
அபராதம் விதித்தார்.
இந்த நிலையில் முட்டை 44 ரூபாய்க்கு அதிகமாகவும், கீரி சம்பா அரிசி 260 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யும் பட்சத்தில் மன்னார் நுகர்வோர் அதிகார சபையிடம் முறையிடுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக