முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் (31.12.19) ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.அதன்படி, 87 மற்றும் 88 ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக
 இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும்.
ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கும் இந்த இரண்டு ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைமன்னாரை சென்றடையும்.இந்த ரயில் தனது பயணத்தை மீண்டும் தலைமன்னாரில் இருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்பித்து காலை 4:40 மணிக்கு கொழும்பு, கோட்டையை 
வந்தடையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக