நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஒரு கிலோகிராம் அரிசியின் சில்லறை விலையை 98.00 ரூபாவாக வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.மூன்றுமாத காலப் பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு
 அரிசியை விநியோகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைப்பதற்கு ஏதுவாக, இறக்குமதி 
செய்யப்படும் கோதுமை மாவிற்கான வரியை சிறியளவில் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே 
இதனைக் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக