சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

வெள்ளி, 1 நவம்பர், 2019

 பாடசாலை முடிந்தவுடன்.01.11.2019. கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில், வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா எனும் பெயர் கொண்ட பேரூந்து.. கிட்டத்தட்ட 50ற்கும் மேற்பட்ட 
மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல், எந்த மாணவரிடத்திலும் கட்டணம் அறவிடவில்லை.மழையில் சிக்காமலும் நேரகாலத்துடனும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர் மாணவர்கள்.குறுந்தூரம் என்று மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் தவிர்க்கின்ற பேருந்து
 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இவர்களின் முன்னுதாரணமான செயல்
நிச்சயம் ஒரு பாடம் புகட்டும்.இந்த பேரூந்து உரிமையாளர் மற்றும் பேரூந்தை செலுத்திய சாரதி மற்றும் நடத்துனருக்கும்
 வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், இது போன்ற சமூகத்திற்கு முன்னுதாரணமான சேவைகளை 
தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்பதையும் தெரிவித்துக்
 கொள்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக