பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை
 படைத்துள்ளார்.
 இந்நிலையில் தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சைவபிரகாசா மகளீர் கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், 
மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை பளுதூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவிக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக