இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இலங்கையிலிருந்து கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் வரி ஒன்றை 
அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்காக நிதி சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு மற்றும் சேவை பெற்றுக்கொள்வதற்காக க்ரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் 
அனைவருக்கும் இந்த வரி அறிவிடப்படவுள்ளது.அதற்கமைய அட்டைகள் ஊடாக இலங்கையில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு நூற்றுக்கு 3.5 வீதம் வரி அறவிடப்படவுள்ளது.
பணத்தை இலங்கையில் இருந்து அனுப்பும் சந்தர்ப்பத்திலேயே வரிப்பணம் அறவீடு செய்யப்படவுள்ளது.வரி தொடர்பான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக