பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019


வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் உழவியந்திரம் பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி குடைசாய்ந்தது.
இதன்போது கணவன் தூக்கிவீசப்பட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அவசர அம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சிறு காயங்களுக்கு உள்ளான கணவன் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் பெரியகட்டு பகுதியை சேர்ந்த தனுசா (வயது 21) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக