நாட்டில் மலையகத்தில் மரக்கறி விலைகள் திடீர் அதிகரிப்பு விலை விபரங்கள்

திங்கள், 3 ஜூலை, 2023


மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நி
லையில், தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக மரக்கறிகள் அழுகிப்போகும் நிலை உள்ளதாக அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்படும் நிலையில், இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
மலையகத்தில் இவ்வாறான காலநிலையால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலை விபரங்கள்
லீக்ஸ் ஒரு கிலோ விலை – 200 ரூபா,  பாவக்காய் ஒரு கிலோ விலை – 200 ரூபா ,வெண்டிக்காய் ஒரு கிலோ விலை – 190 ரூபா ,புடலங்காய் ஒரு கிலோ விலை – 180 ரூபா,  தக்காளி ஒரு கிலோ விலை – 360 ரூபா ,கோவா 
ஒரு கிலோ விலை – 320 ரூபா ,
கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 480 ரூபா,  கத்திரிக்காய் ஒரு கிலோ விலை – 250 ரூபா,  நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 290 ரூபா ,போஞ்சி ஒரு கிலோ விலை – 600 ரூபா, 
பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 500 ரூபா,  கரட் ஒரு கிலோ விலை – 440 ரூபாவிலிருந்து 480 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
..என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக