ரோட்டில் வாழைப்பழம் விற்ற வயதான ஐயாவின் மனவலி.தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ரோட்டில் ஒரு வயதானவர் வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார்.ஒரு பெண் காரில் இறங்கி வாழைப்பழம் 3 என்ன விலை என்று கேட்டாள்?அதற்கு வயதானவர் ஒரு பழம் 5 ரூபாய் என்றார்.அந்த பெண் 6 வாழைப்பழம் 25 க்கு கொடுப்பிங்களா என கேட்டாள்.
வயதானவர் சரிம்மா நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க காலையிலிருந்து நீ தான் முதல் போணி செய்கிற கடவுள் உன்னை நல்லா வைக்கட்டும் என்று சொல்லித் தந்தார்.தான் கேட்ட விலைக்கு கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்துடன் அந்த பெண் வாங்கிக் கொண்டாள்.
பிறகு தன் அழகான காரில் தன் தோழியே அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றால்.இருவரும்,பேசிக்கொண்டே தாங்கள் விரும்பியதே வாங்கி சாப்பிட்டார்கள்.சாப்பிட்டது குறைவு மீதம் விட்டது அதிகம் பில் தொகை 1200 ரூபாய் அவர் 1300ஜ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மிகுதி ரூபாய் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றால்.ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணமான விஷயம்.
ஆனால் வாழைப்பழம் விற்ற பெரியவருக்கு வலி மிகுந்த விஷயம்.”இதில் உற்று நோக்க வேண்டியது”.நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும் போது நம் பலத்தை காட்டுகிறோம்.பணக்காரர்களிடமும் தேவைகளை இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்.நாம் மாறுவோம்.நல்ல மாற்றத்தினே 
உருவாக்குவோம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக