நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் சிக்கல்

திங்கள், 12 செப்டம்பர், 2022

அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவில்லை எனில் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் 
நாளாந்தம் 10 – 12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டியேற்படும் என்று இலங்கை மின்சார சபை 
பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கொழும்பில்11-09-2022.அன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் 
இதனைத் தெரிவித்தார்.
தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் ஒக்டோபர் 20 – 25 ஆம் திகதி வரை மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 
அதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுமெனில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது அத்தியாவசியமானது என்றார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக