நாட்டில் சீனியின் விலைஅதிகரிப்பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கலாம்

செவ்வாய், 31 மே, 2022

நாட்டில் கடந்த வாரம் ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி தற்போது ரூ.320க்கும், ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி தற்போது ரூ.330க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கடந்த வாரம் சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிகரித்து வரும் சீனி விலைக்கு ஏற்ப உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உள்ள சீனி சார்ந்த உணவுகள், தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கும் என ஹட்டன் பிரதேசத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக