கனடாவில் ஐம்பைத்தைந்து ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் பேணிப் பாதுகாத்துள்ளா கேக்

வியாழன், 25 ஏப்ரல், 2024

கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில்  55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண 
கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பேணிப் பாதுகாத்துள்ளார்.
50ம் திருமண ஆண்டு நிறைவில் இந்த கேக்கை எடுத்து பகிர வேண்டுமென
எனினும், 50ம் ஆண்டில் கேக் விடயத்தை ரொச்சல் மார் மறந்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் குளிர்சாதனப் பெட்டியை ரொச்சலும் அவரது மகனும் சுத்தம் செய்துள்ளனர்.
இதன் போது குறித்த குளிர்சாதனப் பெட்டியில் 2018ம் வரையில் திறக்க வேண்டாம் என ஓர் பெட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தாக 
தெரிவித்துள்ளார்.
அதனை திறந்து பார்த்த போது தனது திருமண கேக்கே இவ்வாறு பேணப்பட்டிருந்தமை தெரியந்ததாக ரொச்செல் தெரிவிக்கின்றார்.
ரொச்செலின் கணவர் பிரயன் மார் கடந்த 2023ம் ஆண்டு காலமானார் 
இந்த திருமண கேக் பல்வேறு குளிர்சாதனப் பெட்டிகளில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஓர் புருட்கேக் எனவும் அது பழுதடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருமண கேக் 1968ம் ஆண்டில் இந்தக் கேக் 
தயாரிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது சுவைத்த அதே சுவை இன்னமும் உண்டு என ரொச்சலின் சகோதரர் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கனடாவில் ஐம்பைத்தைந்து ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் பேணிப் பாதுகாத்துள்ளா கேக்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைப்பு

புதன், 24 ஏப்ரல், 2024

இலங்கையில் .25-04-2024.நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் 
என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.  
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என தொழிற்சங்கம் 
தெரிவித்துள்ளது. 
மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைப்பு

நாட்டில் வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தமிழ் மொழியில் தோன்றிய முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோ அடிகளின் நினைவுநாள் வவுனியாவில்.23-04-2024. இன்று  அனுஷ்டிக்கப்பட்டது.  
வவுனியா சின்னப்புதுக்குளம் சிவன் கோவிலுக்குகருகில் அமைந்துள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கருகில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது. 
இதன் போது இளங்கோவாடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றிருந்தது.  
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், நகரசபை 
செயலாளர் பாலகிருபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், 
அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்ல மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

வடக்கு வானில் நள்ளிரவில் ஏற்படும் மாற்றம் விண்கல் மழை பொழிவை கண்ணால் பார்க்க முடியும்

திங்கள், 22 ஏப்ரல், 2024

வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை.22-04-2024. இன்று  நள்ளிரவு வடக்கு
 வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள்
 தெரிவித்துள்ளனர்.
 இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை செயலில் இருக்கும். 
இந்த விண்கல் மழை வீணை விண்மீன் தொகுப்பில் காணப்படுவதால் லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.  
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் 
விழும். இது. இன்று இரவு அல்லது நாளை காலை
 உச்சத்தில் இருக்கும். 
இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இன்று முழு நிலவை பார்ப்பதால் ஒரு பிரச்சனை. அதனால், இது இந்த விண்கல் மழையை காலை 4-5 மணிக்குள் வடக்கு திசையில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வடக்கு வானில் நள்ளிரவில் ஏற்படும் மாற்றம் விண்கல் மழை பொழிவை கண்ணால் பார்க்க முடியும்

நாட்டில் கிளிநொச்சியில் இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நாட்டில் அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு.21-04-2024. இன்று நாடுபூராகவும் நடைபெறுகின்றது.  
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் குறித்த நிகழ்வு 
இடம்பெற்றது.  
மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு இலவச அரிசியை மக்களுக்கு 
வழங்கி வைத்தார்.  
குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், உதவிப்பிரதேச செயலாளர், மக்கள் என பலர் கலந்து
 கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 30897குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டில் சதொச ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் விற்பனை

சனி, 20 ஏப்ரல், 2024

நாட்டில் லங்கா சதொச ஊடாக இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், பத்தாயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அண்மையில் தீர்மானித்துள்ளது. 
வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு 
கலந்துரையாடியதுடன், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய
 தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களில் முதல் கையிருப்பாக 2000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன20-04-2024. இன்று  
 தெரிவித்தார். 
 எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் தேவைப்படுகின்ற பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என 
வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது                  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சதொச ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் விற்பனை

அமீரகத்தில் மீண்டும் மழை: டுபாய் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

அமீரகத்தில் கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் ஸ்தம்பித்தது. இதில் துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.
 இந்த நிலையில் சரியாக ஒரு வாரம் கழித்து நாட்டில் மீண்டும் மழை பெய்ய  கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் கணக்கு கணிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் வருகின்ற ஏப்ரல்21, 22 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான
 மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மிதமான காற்று வீசும் என்றும் பின்னர் அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மணிக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 பின்னர் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் துபாய் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அமீரகத்தில் மீண்டும் மழை: டுபாய் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு