வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில்  புத்புத்தாண்டை முன்னிட்டு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக.14-04.2024. இன்று பிற்பகல் முதல் மேலதிக
 புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 
ரயில்வே பிரதி பொது முகாமையாளர் திரு.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் பயணங்கள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக