நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செவ்வாய், 8 மார்ச், 2022

இன்றைய தினமும்(8) சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின்துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் துண்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு 
உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக