நாட்டில் டீசல் பெற்றோல் விலை திடீர் அதிகரிப்பு

வியாழன், 10 மார்ச், 2022

நாட்டில் லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.இதன்படி, அனைத்து விதமான டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம்
 தீர்மானித்துள்ளது.
அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலின் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.இந்த விலை உயர்வானது, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக