இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுலில் அதன் நேர அட்டவனை

திங்கள், 24 ஜனவரி, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் 
இரவு 09.30 மணி வரை ஒரு
மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
புதிய இணைப்பு
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
மின்தடை இடம்பெறும் நேரங்கள் A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை முதலாம் இணைப்பு -இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக