நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அடுத்த மாதம் அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய கடன் எல்லையை பயன்படுத்துவதற்கான
ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் பத்திரங்களைத் திறப்பதற்காக மத்திய வங்கி 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளதாகவும், அதனால் உடனடி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக