இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

வெள்ளி, 28 ஜனவரி, 2022

நாட்டில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டாலும், சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தை தொடர்ந்தும் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பெரும்பாலான பகுதிகளில், சீமெந்து மூடையின் விலை 1,600 முதல் 1,800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் அதிகார சபை, கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பாகங்களில், அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை
 முன்னெடுத்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக