நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்

செவ்வாய், 25 மே, 2021

 



இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம்
 திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்தி 
வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில் 
வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் நெருக்கடி 
நிலைக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக