தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

நாட்டில் சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று
 இடம்பெறவுள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு 
இடம்பெறவுள்ளது.
அத்துடன் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, புற்றுநோயை ஏற்படுத்த கூடிய
 இரசாயனம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்களை இந்த 
வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஃப்லடொக்ஸின் எனப்படும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 105 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் அண்மையில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
குறித்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக