ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

திங்கள், 27 ஏப்ரல், 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளைய தினம் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு 
உத்தரவு மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் திங்கட்கிழமை
 அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை 
மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக