கொரொனா தொற்று முடியும் வரை சாரதி அனுமதிப்பத்திர காலாவதித் திகதி நீடிப்பு

சனி, 18 ஏப்ரல், 2020

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலத்தை கொரோனா தொற்றுநோய் முடியும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு 
அறிவுறுத்தியுள்ளார்.சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 10 அன்று காலாவதியானது.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் இயங்காததால், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்க
 முடியவில்லை.இன்று போக்குவரத்து துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, கொரொனா தொற்றுநோய் அபாயம் முடிவடையும் வரை சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி நீடிக்கப்பட அறிவுறுத்தினார். அத்துடன்,
 இது தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய ஊழியர்கள் குழுக்களைப் பயன்படுத்தி நாரஹன்பிட்டி தலைமை அலுவலகத்தில் அலுவலக நடவடிக்கைகளைத் தொடரவும், இந்த மாதம் 20 ஆம் திகதிக்குப் பிறகு 
பிற மாகாணங்களில் அலுவலகங்களைத் திறக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.இதேவேளை, கொரோனா முடக்கத்தினால் மோட்டார் போக்குவரத்து திணைக்கத்திற்கு சுமார் 30 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக