இரு மாணவிகளின் செயல் மெய்சிலிர்க்க வைத்தன

வெள்ளி, 9 நவம்பர், 2018

பாதையோரம் கிடந்த பணத்தொகையுடன் பெறுமதிமிக்க கைபேசியையும் பாடசாலை மாணவிகள் இருவர் கண்டெடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் கைகளித்துள்ளனர்.
அட்டன் சென் கபிரியல் மகளீர் கல்லூரி மாணவிகளே 07.1.2018. மாலை அட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளித்ததாக அட்டன் பொலிஸ் நிலைய பொருப்திகாரி ஏ.எல் எம் ஜெமில் தெரிவித்தார்
குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் தாயார்ஒருவரினால் கடந்த மாதம் 27 ம் திகதி தமது பிள்ளைகளை பாடசாலைலிருந்து வீடிற்கு அழைந்து வந்த போதே குறித்த கைபேசிடன் பணப்பையும் தொலைதுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலையில் முறைபாடு 
செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையிலே குறித்த பாடசாலையில் கல்விபயிலும் என் எம் ஹம்னா ஏ.எஸ் பவித்திரா ஆகிய மாணவிகளினால் 07.11.2018 மாலை பாடசாலை விட்டு வந்துக்கொண்டிருக்கையில் பாதையோரம் வடிகாணில் கிடந்த பணப்பையை கண்டு எடுத்து பொலிஸ் நிலையத்தில் 
ஒப்படைத்துள்ளனர்.
பணப்பையை பரிசோதணை செய்த பொலிஸார் 9 ஆயிரம் ரூபா பணமும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான கைபேசியும்
 மீட்டுள்ளனர்.
முறைப்பாடு செய்திருந்த அட்டன் வில்பிரட் நகரை சேர்ந்த முறைப்பாட்டாளரை பொலிஸார் 08.11.2018 வரவைழைத்து பணத்தினையும் கைபேசியையும் கையளித்தனர். குறித்த மாணவிகளின் சிறந்த செயற்பாட்டை பாராட்டி பரிசில்ளும் அட்டன் பொலிஸார் 
வழங்கி வைத்தனர்.



நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக