முக்கிய அறிவிப்பு சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுருக்குக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு

செவ்வாய், 3 மார்ச், 2020

கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் 
அறிவித்துள்ளது.இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
 கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில், 4,987 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 7 இலட்சத்து 17,008 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக