.சங்குபிட்டி பாலத்தில் தடம்புரண்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பினர்!

திங்கள், 23 அக்டோபர், 2017

சங்குப்பிட்டி பாலத்தில் எதிர் எதிரே வந்த கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கார் பாரிய சேதம் அடைந்ததுடன் அதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் உயிர் 
தப்பியுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் சங்குப்பிட்டி பாலத்தில் கார் ஒன்று வேறு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
அப்போது எதிரே வந்த வாகனத்துடன் மோதுண்டு கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக