நீர்வேலியில் பயங்கர விபத்து இளைஞன் படுகாயம்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 
இன்று காலை மகிழுந்து (கார்) ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் காரும் எதிர்முனையில் வந்துகொண்டிருந்த இளைஞனின் உந்துருளியும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானத
இதனால் உந்துருளியில் பயணித்த இளைஞன் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். 
பின்னர் அவரை வீதியில் வந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் மோதிக்கொண்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதோடு இருவரினதும் கட்டுமீறிய வேகமே விபத்திற்கான காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று வெகு நேரமாகியும் பொலிஸார் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகவில்லை என்றும் மக்களால் விசனம் 
வெளியிடப்பட்டுள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக