உங்கள் அனைவரின்இன்றய ராசி பலன் 14.01.2022

வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விஷயம். இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். நமது நாளைய தினத்தின் சுப பலனை இன்று அறிவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சனைகளை 
கையாள இயலும்.
நாளைய தினத்தின் சுப அசுப பலன்களை அறிந்து அதற்கேற்ப நாம் திட்டமிட பொதுவான நாளைய ராசி பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நாளைய தினம் இனிமையான நாளாக இருக்க இந்த பதிவில் நாளைய ராசி பலன் பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்தறியலாம்.
மேஷம்:மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமாக இருக்காது. சில நேரத்தில் நம்பிக்கையின்றி காணப்படுவீர்கள். நாளைய நாள் சாதகமாக அமைய அனுசரித்து செல்ல வேண்டும். நாளை பணிச்சுமை அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையுடன் பொறுமையாக இருப்பது நல்லது. நாளை நிதிநிலைமை நன்றாக இருக்காது. நாளை தாயின் உடல்நலத்திற்காக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரிஷபம் :ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு நாளைய நாள் ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த நாள். நாளை வெளிப்பயணம் மேற்கொள்வீர்கள். நாளை உங்களுடைய செயல்களை மேற்கொள்ளும் போது பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். வீட்டில் இருக்கக்கூடிய மூத்தவர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் காரணமாக வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை பணவரவு நன்றாக இருக்காது. நாளை தொண்டை வலி
 ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்:மிதுனம் ராசிக்காரர்கள் நாளைய தினம் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. பணியிட சூழல் நன்றாக இருக்காத. வேலையை பொறுத்தவரை திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்ப பிரச்சனை காரணமாக வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக 
வைத்துக்கொள்ளலாம்.
கடகம்:கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். புதிய தொடர்புகளுக்கும் புதிய நட்பிற்கும் நாளை வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். இதனால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கை துணையின் உறவில் சமநிலை காணப்படும். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். நாளை மிகுந்த ஆற்றலுடன் இருப்பதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
சிம்மம் :நாளை உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள்.நாளை சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை கிடைக்கும் புதிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்துகொள்வீர்கள். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
கன்னி:கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாளில் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். பணியிட சூழல் நாளை சவால் நிறைந்ததாக இருக்கும். உங்களுடைய செயலிற்கும் அங்கீகாரம் கிடைக்காது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை அதிகமாக செலவுகள் இருக்கும். நாளை ஆரோக்கியத்தில் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்:துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாளை பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். நாளை பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அகந்தை போக்கினை காண்பிப்பீர்கள். உங்களுடைய குடும்ப வளர்ச்சிக்காக பணத்தை செலவு செய்வீர்கள். ஒவ்வாமை காரணமாக தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.
விருச்சிகம்:விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிக அளவில் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். பணியில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.பணியிட சூழல் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணை இருவரிடம் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். நாளை சேமிப்பு அதிகமாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் மன உறுதி காரணமாக நாளை முழு ஆரோக்கியத்துடன் 
காணப்படுவீர்கள்.
தனுசு:தனுசு ராசிக்காரர்கள் நாளைய நாளில் உங்கள் முயற்சிகளின் வளர்ச்சி சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை நேர்மையாக செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் உணர்வு நேர்மை காணப்படும். நாளை திடீர் பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நாளை திடமாகவும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.
மகரம்:மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. நாளை பணிகளை செய்யும் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணியிடத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வீர்கள். நாளை பணவரவு மனதிற்கு திருப்தி கிடைக்காது. பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக பதட்டம் 
காணப்படும்.
கும்பம்:கும்பம் ராசிக்காரர்கள் நாளைய நாளில் உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். நாளை மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நாளை பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். நாளை மந்தமாக உணர்வீர்கள். நாளை பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். நாளின் இறுதியில் தேவையில்லாத செலவுகளை சந்திப்பீர்கள். நாளை மனதில் ஆற்றல் குறைவாக இருப்பதன் காரணமாக நீங்கள் வலுவிழந்து காணப்படுவீர்கள். தூக்கமின்மை உங்களை
 பாதிக்கும்.
மீனம்:மீனம் ராசிக்காரர்கள் நாளைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். நாளை கடினமான பணிகளை கூட எளிமையாக முடிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். வாழ்க்கை துணை இருவரிடம் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். நாளை மனதில் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் இருப்பதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - உங்கள் அனைவரின்இன்றய ராசி பலன் 14.01.2022

யாழ் மீசாலை அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு

வியாழன், 13 ஜனவரி, 2022

யாழ் தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது..13-01-2022.
இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது.
சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது மலைப்பாம்பு சேவலை விழுங்க 
முற்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்து கட்டியுள்ளனர். கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் 
ஏற்படுத்தியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>








READ MORE - யாழ் மீசாலை அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு

நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

புதன், 12 ஜனவரி, 2022

நாட்டில்.12-01-2021.இன்று மின் வெட்டு ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக நாட்டின் சில பகுதிகளில் -12-01-2012.இன்று முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையிலேயே சற்று முன்னர் பழுதடைந்த இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடைப்படாது என்று
 தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

நாட்டில் நாளை சில பிரதேசங்களில் 5மணி வரை மின்சாரம் துண்டிப்பு.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை (12) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் 
சில பிரதேசங்களில்
மின்சாரம் தடைப்படும்.வவுனியா பிரதேசத்தில் அரசன் அரிசி ஆலை, வைரவப் புளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, றம்பைக்குளம், மகாபகல அளுத்வத்த, புபுதுகம, குருக்களூர் மன்னார் வீதி, 
முகத்தான்குளம் 1
ஆவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் நாளை சில பிரதேசங்களில் 5மணி வரை மின்சாரம் துண்டிப்பு.

நாட்டில் வசிக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப் பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர 
தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் கிடைக்காததால் முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கால்நடை தீவனம் விரைவில் வழங்கப்படாவிட்டால் தட்டுப்பாட்டு நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் கோழி இறைச்சிக்கு அதிக கிராக்கி இருந்ததால் விலையும் வேகமாக உயர்ந்தது. எவ்வாறாயினும், தேவை குறைவடைந்ததன் காரணமாக கோழி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் வசிக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ருநெல்வேலி- யாழ்ப்பாணம் வீதியில் கிடந்து கண்டெடுத்த 137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மாணவர்களான பிரதீபன் மற்றும்
ஜெயதர்ஷனிற்கு பலரும் பாராட்டு,

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

நாட்டு மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு

திங்கள், 3 ஜனவரி, 2022

நாட்டில் வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று கிடைக்கவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் 
தெரிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார்.நாளை அதிகாலை 2 மணிக்கு அதனை மேலும் தெளிவாக அவதானிக்க முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெளிவாக பார்வையிட முடியும் என்பதுடன், தெளிவான வானிலை நிலவும் பகுதிகளிலும் எரிகற்கள் வீழ்ச்சியினை காண முடியும் என சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய
 தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டு மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு