மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

வெள்ளி, 10 மே, 2024


மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை 
பதிவு செய்துள்ளது.
 அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.88 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

வியாழன், 9 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து 
காணப்படுகின்றது.  
அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற இயல்பு நிலையுடன் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர
 வியாபாரங்கள் 
போன்றவைகள் வழமை போன்று இயங்கிய போதிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.  
மேலும் அரச தனியார் போக்குவரத்து குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் மட்டுப்படுத்த மட்டில் இடம்பெற்றது. அதில் பயணம் செய்கின்ற பொதுமக்களின் எண்ணிக்கை 
குறைவாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது.இது தவிர அரச தனியார் வங்கிகள் திறந்துள்ளதுடன் மக்கள் வருகை 
குறைந்தளவில் காணப்படுவதடன் சில இடங்களில் ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர். கடந்த
 தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் மழை
 திடிரென பெய்ததுடன் அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை
 அவதானிக்க முடிந்தது.  
சவளக்கடை மத்தியமுகாம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் வான்கதவுகள் தற்போது திறக்கப் பட்டுள்ளதால் அதிகளவான நீர் வாய்க்கால் ஊடாக வெளியேறுகின்றது.
இவ்வாறு வெளியேறும் நீரில் அதிகளவான மக்கள் வெப்பத்தை தணிப்பதற்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா சென்று நீராடுகின்றனர். மேலும் பிரதேச செயலகங்கள் நீதிமன்றங்கள் வங்கிகள் பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்குகிறது. 
எனினும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன் இரவு வேளையில் அதிகளவில் நடமாடி வருகின்றனர்.அத்துடன் பெரிய நீலாவணை, 
ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது,
 மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம்,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.  
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் சில இடங்களில் முப்படையினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு 
வருகின்றனர்.
எனினும் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டி 
காணப்பட்டது. மேலும் வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள் பாமசிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று
 திறக்கப்பட்டாலும் மக்கள் ஆர்வத்தடன் பொருட் கொள்வனவில் ஈடுபடவில்லை .  
 எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் 
தெரிவித்தமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

புதன், 8 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் வீதியால் செல்வோருக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்.
அண்மைக்காலமாக வட மாகாகணம் உட்பட பல இடங்களிலும் வெயிலின் உச்சத்தால்மக்கள் பெரும் அவதிப்படும்நிலை 
காணப்படுகின்றது.  
இந் நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் வவுனியா மன்னார் வீதியில் செல்வோருக்கு 
குளிர்பானங்களை வழங்கியிருந்ததுடன் பலர் ஆர்வத்துடனும் வெயில் காரணமாகவும் குளிர்பானத்தை ஆவலுடன் வேண்டி பருகியதை 
காண முடிந்தது.என்பது குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

செவ்வாய், 7 மே, 2024

சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக
 மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக
 வலைதளங்களில் பரவி வருகிறது.
தோல் இயற்கையான நிறத்தை இழந்து வெளிர் வெள்ளை நிறமாக மாறும் நிலையை விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. இந்த
 அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஸ்மித் என்பவரால் வளர்க்கப்பட்ட பஸ்டர் என்ற 4 வயது நாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் கருப்பாக இருந்தது.
ஆனால், விட்டிலிகோ நோயால் கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நிறம் மாறி தற்போது முற்றிலும் வெண்மையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை reddit தளத்தில் வெளியிட்டு, இணையத்தில் வேகமாக 
பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

திங்கள், 6 மே, 2024

நாட்டில்வளிமண்டலவியல் திணைக்களம்.07-05-2024. நாளை  வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், 
அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம்  
அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.  
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 
வெப்பச் சுட்டெண் "கவனம்" கோரும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

நாட்டில் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் : மக்களுக்கு எச்சரிக்கை

ஞாயிறு, 5 மே, 2024

இலங்கையின் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அதன்படி கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் 
அலைகள், உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 - 16) வினாடிகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் 
காணப்படுகின்றது. 
எனவே கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் மன்னாரில் பிரதான வீதி ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

சனி, 4 மே, 2024

நாட்டில் மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்றவிதமாக கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
 குறிப்பாக வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு பாரிய அளவு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும் நிறைந்து 
காணப்படுவதுடன் மிருகங்களும் அவற்றை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 குறிப்பாக மருத்துவ கழிவுகளும் முறையற்ற விதமாக கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறான குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டு
வருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் 
கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் செயற்படுவதை 
காணக்கூடியதாக உள்ளது.
 அதே நேரம் பொலித்தீன் பைகள் பிலாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது
 பெய்யும் மழையின் போது டெங்கு நுளம்புகளும் பெருக கூடிய வாய்புக்கள் காணப்படுகின்றது.
எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உரிய விதமாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு எதிராக பிரதேச சபை மற்றும் சுகாதார ஊழியர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மன்னாரில் பிரதான வீதி ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்