நாட்டில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வெள்ளி, 3 மே, 2024

கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை 
வௌியிட்டுள்ளது. கல்பிட்டியில் இருந்து கொழும்பு,
 காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என குறித்த அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதன்படி, அந்த கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையான அலை உயரம் மற்றும் 12-16 வினாடிகள் வரை அலைகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இதன்காரணமாக கல்பிட்டியின் அந்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக 
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானமாக
 இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து 
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. கல்பிட்டியில் இருந்து 
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதன்படி, அந்த கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையான அலை உயரம் மற்றும் 12-16 வினாடிகள் வரை அலைகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இதன்காரணமாக கல்பிட்டியின் அந்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்க விடுத்துள்ள எச்சரிக்கை

வியாழன், 2 மே, 2024

இலங்கையின் பல மாநிலங்களின் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையின் அளவு கவனத்தில் கொள்ளவேண்டிய அளவில் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, உள்ளன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






READ MORE - வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்க விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது

புதன், 1 மே, 2024

நாட்டில்.01-05-2024. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய விலை திருத்தத்தின் படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக இருக்கும் என அந்த நிறுவனங்கள் மேலும் 
தெரிவிக்கின்றன.
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய விலை திருத்தத்தின் படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக இருக்கும் என அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது

இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் 
விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

திங்கள், 29 ஏப்ரல், 2024

இலங்கையில் பல பகுதிகளில்.29-04-2024. இன்று  பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
விடுத்துள்ளது.  
மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் தனிமைப்படுத்தப்பட்ட இடியுடன் கூடிய மழையுடன்   பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

யாழ் பத்தமேனி பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் இருவர் கைது

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது
அச்சுவேலி -பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த 
சம்பவம்  27-04-2024.அன்று  இரவு இடம்பெற்றுள்ளது. வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக 
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் பத்தமேனி பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் இருவர் கைது

அர்ஜென்டினா அழகி அறுவது வயதில் சாதனை படைத்துள்ளார்

சனி, 27 ஏப்ரல், 2024

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. 
ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற
 நிலை உருவானது.
அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். 
அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று 
அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது 
சாத்தியமாகியுள்ளது. 
அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது 
வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று 
அவர் தெரிவித்தார்.
அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.
 அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பதாகும் 




READ MORE - அர்ஜென்டினா அழகி அறுவது வயதில் சாதனை படைத்துள்ளார்