நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 8 பேர் கைது

வியாழன், 28 ஏப்ரல், 2022

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு 
தெரிவித்துள்ளது.
மீகொட, ஏகொடஉயண, அநுராதபுரம், கல்கிஸை, நீர்கொழும்பு, அங்குலானை, மிஹிஜய செவன ஆகிய இடங்களிலேயே இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக