நாட்டில் வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளாதவர்களிடம் இருந்து தண்டப்பணமாக அறவிட திட்டம்

புதன், 3 ஜனவரி, 2024

நாட்டில் வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 
தெரிவித்துள்ளார்.  
ருவன்வெல்ல பிரதேசத்தில்.03-01-2024. இன்று)காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை 
குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. 
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி 
சிந்தித்து, மாநில வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.  
“வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக