நாட்டில் இரண்டு வகையான மாதுளை இனங்கள் கண்டுப்பிடிப்பு

புதன், 24 ஜனவரி, 2024

 

ஹோமாகம, தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்றும் 'லங்கா ரெட்' ஆகிய இரண்டு
 புதிய வகை 
மாதுளை வகைகள் இன்று (24.01)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு மாதுளை பழங்களும் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு சமீபத்திய வகைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது மற்றும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலிருந்தும் 20-25 கிலோ மாதுளை
 அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம்  ஒரு ஏக்கருக்கு 8 மில்லியன் ரூபாய் என்று 
அமைச்சர் கூறினார்.
குறிப்பாக இந்த இரண்டு வகையான மாதுளைகளும் உலர் வலயத்தில் பயிரிடுவதற்கு ஏற்றது, மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக இந்த வகைகளை
 பயன்படுத்தலாம்.
எமது நாட்டில் மாதுளை இறக்குமதி செலவை குறைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைவாக, இந்த நாட்டில் பயிரிடக் கூடிய விவசாயப் பயிர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
 செய்யப்படுவதைத் தடுக்க, ஏற்றுமதி 
செய்யக்கூடிய பயிர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக