தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

சனி, 16 மார்ச், 2024

தற்போது  இலங்கையில் நிலவிவரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தோல் எரியும் தன்மையை இங்கு காணலாம்.
தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை ஏற்படுவதாக வைத்தியர்கள்
 குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலாக, தற்போதுள்ள தோல் ஒவ்வாமை அதிகரிப்பு வெப்பமான காலநிலையால்  ஏற்படலாம் என்று நிபுணர்கள் 
சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக இளம் பிள்ளைகள் இந்த நோயினால்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் டாக்டர் இந்திரா கஹவிட்ட தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக