நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

வியாழன், 14 மார்ச், 2024

யாழ் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். 
கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள 
கையளிக்கப்பட்டது . 
விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாத நிலையில் காணி உரிமையாளர்கள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதனால் , விடுவிக்கப்பட்ட தமது காணிகள் , வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புகின்றனர். 
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் காணிகள்  வீடுகளில் யாரும் இல்லாத நிலைமையை பயன்படுத்தி , திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து , பயன்தரு மரங்களை வெட்டுவதுடன் , வீட்டில் காணப்படும் ஜன்னல் , கதவுகளின் நிலைகள் , இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றை 
களவாடி செல்கின்றனர். 
கதவுகள் ஜன்னல் நிலைகளை களவாடும் போது , வீடுகளையும் சேதமாக்குகின்றனர். 
திருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும் , காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிசாரிடம் தாம் கோரிய 
போதிலும் , அவர்கள் திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பின்னடிப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக