நாட்டில் ஆறுகளில் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசனத் நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிவித்தல்

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

நாட்டில் களு, கிங், நில்வலா ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் கீழ்ப்பகுதிகளில் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
 எவ்வாறாயினும், ஆறுகளை பாதிக்கக்கூடிய எந்தவொரு பகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு நேற்று பதிவாகவில்லை என்பதால், ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த 
முகாமைத்துவ பிரிவின் நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வரதெரிவித்தார்.
 எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் கணிசமான மழை பெய்தால், களு, கிங், நில்வலா ஆறு மற்றும் அத்தனகலு ஓயாவின் 
நீர்மட்டம் உயரும்.
 இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகளை மக்கள் கவனிக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன, நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர
 மேலும் தெரிவித்தார்.
 இதேவேளை, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக