எரிபொருட்களின் விலையை பிரான்ஸில் குறைத்து விற்கும் நிறுவனங்கள்

சனி, 30 செப்டம்பர், 2023

கடந்த கோடை காலத்தில் இருந்து பிரான்சில் எரிபொருட்களின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக ஏறிச் சென்றுள்ளது. இதனால் வாகன பாவனையாளர்கள், நிறுவனங்கள், மீன் பிடித்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 அரசாங்கம் எரிபொருட்களின் விலையை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக 
எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இலாபம் இன்றி சிலகாலம் தங்கள் விற்பனைகளை செய்ய முன்வர வேண்டும் எனும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை total énergie நிறுவனம் ஏற்கனவே ஏற்க மறுத்து விட்ட நிலையில், Leclerc மற்றும் Carrefour எரிபொருள் நிரப்பு நிறுவனங்கள் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்துள்ளன.
செப்டம்பர் 29, வெள்ளிக்கிழமை முதல் Leclerc மற்றும் Carrefour இந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் லீட்டருக்கு ஒருசில centimes லாபத்தை குறைத்து அவை விற்பனை 
செய்து வருகின்றனர்.
 இதுகுறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தங்கள் நன்றியினையும் அரசுக்கு தெரிவித்துள்ளனர். அதேவேளை எரிபொருட்களுக்கு 
அரசு வசூலிக்கும் வரியை குறைத்தால் மேலும் எரிபொருட்களின் விலை குறையும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக